ADDED : பிப் 10, 2015 12:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சத்தியம் என்னும் கடவுள் ஒன்றே. அதை ஆராதிக்கும் வழிகள் பல இருக்கின்றன.
* வாழ்வில் சத்திய விரதத்தை நோற்பவன், முடிவில் ஆனந்தம் அடைகிறான்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிறருக்கு உபதேசிக்கும் அதிகாரத்தைப் பெற முடியாது.
* யாரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் பழகவும், செய்யவும் முடியும். முயற்சித்தால் முடியாதது ஒன்றில்லை.
* மனப்பக்குவம் வந்து விட்டால், பக்தன் கேட்ட வரத்தை அளிக்க தெய்வம் காத்திருக்கிறது.
-பாரதியார்